இளவேனிற் நிலவு – கௌசல்யா ஞானேஸ்வரன்

வெள்ளிக் கொலுசு
மெல்ல சத்தமிட்டு
அழகாய் அடியெடுத்து நீ
தள்ளாடி நடக்கையில்
என்னுள்ளம் சிறகடிக்கும் 
மார்போடு அணைத்துனை 
தாலாட்டு நான் பாட
நிம்மதி என்னைத்  தழுவி
மகிழ்விலே வான்மிதப்பேன்
கண்ணாமூச்சி விளையாடி 
கன்னக்குழி அழகில்  
முத்தங்கள் பதித்து 
களிப்பிலே திளைப்பேனே
இதழ் மூடி புன்னகைத்தாலும் 
இளவேனிற் நிலவு நீ   
இமைக்குள்ளே நின்றாடும்
இனிதான கவிதை நீ
விழிகளில் வித்தை காட்டி
வியப்புறச் செய்பவனே,
வயது ஒன்றைக் கடந்தவனே
இச்சை மொழி பேசி
கொஞ்சும் நாளுக்காய்
நெஞ்சம் ஏங்குதே 
எனது பேரின்ப பேரனே!

Leave a Reply

Categories