புரியாத புதிராய்
புத்தி தடுமாறி,
மனம் முழுவதையும்
மௌனம் ஆக்கிரமித்தது
இடரின் சூழலில்
இனம்புரியா கலக்கம்
இதழ்களின் இயல்பான
இனிமை தொலைய
காற்றில் மிதந்த சொற்களும்
காதுகளில் விழாது போயிற்று
சிந்திக்க மறந்து,
சிதறிய எண்ணங்களால்
கவிதை காணாமல் போய்,
கரம் பற்றா காரணத்தால்
தூரிகை துறவறம் கொள்ள
ஸ்பரிசம் படா ஏக்கத்தில்
வெற்றுக் காகிதம் என்னை
வெறித்துப் பார்த்தது
சிகரங்களைத் தொடும்
எனது இலக்கு
சிதையாமல் இருக்க,
கனவுகளுக்கு விடுப்பு அளிக்காமல்,
கால்களற்ற கற்பனைகளோடு
கட்டாயமாய் பயணம் செய்ய
மன்றாடிய எனது உள்ளம்
இயல்பு நிலைக்காக
இறைவனிடம் தஞ்சம் புகுந்தது!


