தனிமையில் உன்னைத்
தழுவினேன் என்
இமையின் திரை
மெல்ல விலகியது
இளைப்பாறாமலே
இனிமையாகி
பெருமூச்சின்
சப்தத்தில் படபடக்கிறாய்
புரட்டப் புரட்ட
புதுப்புது வார்த்தைகளால்
மௌனமாய்
கதைக்கிறாய்
கற்பனையில்
வசீகரிக்க
கதகதப்பாய்
காட்சியாகிறாய்
உணர்வோடு கலந்து
உயிரோடு ஊடுருவி
கண நேரத்தில்
கவி எழுத வைத்து
மனதிற்குள்
மாயம் செய்கிறாய்
கவலைகளைத்
துரத்தி
காதலிக்க
கற்றுத்தருகிறாய்
உன்னை நேசித்து
வாசிக்கும் பொழுதெல்லாம்
நான் நானாகிறேன்
அனைத்துலகை ஆளும்
காகித ஜாலம் நீ
அற்புத அதிசய புத்தகமே….!


