நிமிர்ந்து பார்
சகமனிதனை
பணிந்து போ
உன் இலக்கிடம்
வளர்ந்து செல்
வாழ்க்கையில்
மலர்ந்து வா
நல் எண்ணங்களில்
ஒரு முறை கூர்ந்து பார்
உலகம் வியக்க வளர வைப்பேன்!
நான் உன் கையில் இருக்கும் அலைபேசி அல்ல..
உன் அறிவை அரியாசனத்தில் அமர்த்தத் துடிக்கும்
புத்தகம் பேசுகிறேன்!
அமிழ்ந்து கிடக்காதே
அலைபேசித் திரையில்..
ஆழ்ந்து தேடு உன் வாழ்வை
புத்தக ஆலயத்தில்,
வாசிப்பை மெருகேற்றும்
வீட்டிற்கோர் புத்தகச்சாலை
அறியாமையின் இருள்நீக்கி
ஒளியேற்றும் எதிர்காலம்
காலத்தே பயிர் செய்,
தவறாமல் நற்பெயர் செய்,
அதை இப்போதே- இன்றே செய்
அறிவே அகத்தின் மெய்!
“நாளை பார்ப்போம்”
என்பவன் காலத்தின் அடிமை,
எதையும் இன்றே தொடங்குபவனே
வரலாற்றின் மாவீரன்!


