முற்றத்துக்கு ஓர் விடுகதை – சச்சிதானந்தம்

 

அலைபாய்ந்தது என் மனம்
அந்தி வேளையதில் 
முற்றத்தின் திறந்த வட்டத்தை 
அண்ணாந்து பார்த்தபடி
எண்ணமும் எழுத்தும் நர்த்தனமிடும் ஆடலரங்கமோ 
கதைகள் கவி பாடும் கலாசாலையோ 
கவிதைகள் கதை சொல்லும் பயிலரங்கமோ
பயணங்கள் நடை பயிலும் நடைபாதையோ
வள்ளுவன் குறள் தீட்டும் குறலோவியமோ
கருத்துக்கள் பரிமாறும் கருத்தரங்கமோ 
வட்டத்து விடுகதைக்கு விடையென்ன
கதை எழுதி கதை படிக்கும்
முற்றத்து விருந்தினரே !

Leave a Reply

Categories